India
இளம்பெண்ணிடம் மயங்கி அவரின் இடத்துக்கு சென்ற இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மோசமாக புகைப்படம் எடுத்த கும்பலின் பின்னணி
இந்தியாவில் இளைஞனை மயக்கி ஹொட்டலுக்கு வரவழைத்த இளம்பெண் தனது கும்பலுடன் சேர்ந்து அவரிடம் இருந்த பணம், செல்போன், காரை கொள்ளயடித்த சம்பவத்தின் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.
கேரளாவின் கொத்தமங்கலத்தை சேர்ந்த இளம்பெண் ஆர்யா. இவர் முவட்டுபுழா என்ற ஊரை சேர்ந்த இளைஞனிடம் பேசி அவரை மயக்கி சில தினங்களுக்கு முன்னர் இரவு சொகுசு ஹொட்டலுக்கு வரவழைத்தார்.
அங்கு வந்த அந்த இளைஞனுக்கு அ-தி-ர்-ச்-சி கா-த்-தி-ரு-ந்-த-து.
ஏனெனில் அங்கு நான்கு பேர் இருந்தனர். பின்னர் இளம்பெண் ஆர்யா அந்த இளைஞனை க-ட்-டாய-ப்-ப-டுத்-தி நி-ர்-வா-ண-மா-க தன்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
இதையடுத்து புகைப்படத்தை வெளியில் கசியவிடாமல் இருக்க ரூபாய் மூன்றரை லட்சம் கேட்டு அனைவரும் மிரட்டினர்.
ஆனால் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என இளைஞன் கூறிய நிலையில் அவரின் கார், மொபைல் போன், ஏடிஎம் கார்டை திருடிய கும்பல் அந்த இளைஞனையும் காரில் ஏற்றி கொண்டு இரவு முழுவதும் சாலையில் சுற்றி வந்தது.
அப்போது ஏடிஎம் கார்டு மூலம் ரூ 35,000 பணத்தை எடுத்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் சிறுநீர் கழிக்க வேண்டும் என இளைஞன் கூறிவிட்டு காரில் இருந்து கீழே இறங்கி தன்னை காப்பாற்றுமாறு கத்தியுள்ளார்.
அவர் குரலை கேட்ட ரோந்து பணியில் இருந்த பொலிசார் அந்த கும்பலை சுற்றிவளைத்து பிடித்தனர், மேலும் இதில் தொடர்புடைய 4 பேரை பொலிசார் தேடி வருகின்றனர்.
